தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழைக்காலம் நெருங்கிவிட்டதால் மின்சாரம் கையாள வழிமுறைகள்: மேற்பார்வை பொறியாளர் அறிக்கை

 

Advertisement

திருவள்ளூர்: மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அ.சேகர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்துகிடந்தால் அவற்றை தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை மின்சாரவாரிய ஊழியர் துணையுடன் மட்டுமே வெட்ட வேண்டும். மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அருகே செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது.

குழந்தைகள் மின்கம்பிகளுக்கு அருகில் காற்றாடி விடக்கூடாது. டிரான்ஸ்பார்மர்கள், மின்சார பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ, கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின்கம்பம் மீது கால்நடைகளை கட்டக்கூடாது. இடி, மின்னலின்போது மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகர்வோர்கள் தன்னிசையாக மின் மாற்றங்களில் எரியிழைணை மாற்றக்கூடாது. இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி ஆகிய மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்கவேண்டும்.

Advertisement