தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு தாலுகாவில் மழைநீர் தேங்கி நிற்கும் காவல் நிலையம்: நோய்தொற்று பரவும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, அதன்மூலம் அங்கு வரும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இவற்றை தவிர்க்க, காவல்நிலையத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, அவற்றை முறையாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி, ஒரு தீவு போல் காட்சியளிக்கிறது.
Advertisement

மேலும், அங்குள்ள பறிமுதல் வாகனங்கள் மற்றும் அதை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அங்கு வரும் புகார்தாரர்கள் உள்பட அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இக்காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது எனக் குறிப்பிடத்தக்கது.எனவே, புதிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரை முற்றிலும் அகற்றி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மழைநீர் தேங்காதவாறு மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement

Related News