தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரபாண்டியன்பட்டினத்தில் 10 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

*பொதுமக்கள் கடும் அவதி

Advertisement

திருச்செந்தூர் : மழை நின்று இயல்பு நிலை திரும்பிய போதிலும் வீரபாண்டியன்பட்டினம் ஜூப்லி நகர் மற்றும் குறிஞ்சி நகர் கடைசி தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் 10 நாட்களுக்கும் மேலாக வடியாததால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

தென் கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் வரை தொடர் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழை நீர் ஆறாக ஓடியும், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியும் கிடந்தது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கடந்த 30ம் தேதி முதல் மழை நின்றதையடுத்து இயல்பு நிலை திரும்பியது. இதேபோல திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜுபிலி நகர், குறிஞ்சிநகர் கடைசி தெருவில் மழை நீர் இன்னும் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போதிலும் இன்னமும் சில பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தே உள்ளது.

தேங்கியுள்ள நீரினால் நோய் வரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பஞ்சாயத்து நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் விரைவாக நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement