தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொட்டியது மழை... கூடியது குளிர் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் குஷி

கொடைக்கானல் : கொடைக்கானலில் மழை காரணமாக குளிர் மேலும் அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குஷியடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

Advertisement

இங்கு தற்போது ஆப் சீசன் எனப்படும் இரண்டாம் சீசன் நிலவி வருகிறது. கோடை, குளிர் சீசன்கள் இடையே உள்ள இந்த சீசன் காலத்தில் எப்போதுமே இதமான தட்பவெப்ப நிலை நிலவும். அதன்படி இந்த ஆண்டும் இரண்டாம் சீசன் களைகட்டி வருவதால் இதனை அனுபவிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த 2 நாட்களாக வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

நேற்று மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கை பசுமை கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர். நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர்.

மேலும் பிரையண்ட் பூங்காவில் வண்ண பூக்களை கண்டு ரசித்து செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று பிற்பகல் சுமார் அரை மணிநேரம் மழை பெய்ததால் மேலும் குளிர் அதிகரித்தது. இந்த கிளைமேட்டை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்தனர். மேலும் வெயிலுடன் கூடிய மழை காரணமாக வானில் தோன்றிய வானவில்லை கண்டு பரவசமடைந்தனர்.

Advertisement

Related News