தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் மழை; குமரி உள்பட 16 ரயில்கள் தாமதமாக ஓடுகின்றன

Advertisement

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று மாலைக்கு பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் 16 ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக பெய்து வரும் மழை இன்றும் தொடர்கிறது. இன்று இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலைக்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததில் திருவனந்தபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. சிறையின்கீழ், கழக்கூட்டம், வேளி உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்ததில் நேற்று இரவுக்குப் பின்னர் திருவனந்தபுரம்-கொல்லம் இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-கோழிக்கோடு ஜனசதாப்தி, திருவனந்தபுரம்-எர்ணாகுளம் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-கொல்லம் மெமு, புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ், கத்ரா-கன்னியாகுமரி ஹிமசாகர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்பட 16 ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்று காலை 5.55 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கேரளாவில் மேலும் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், கண்ணூர் உள்பட 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News