31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்: கேரளாவில் இன்றும், நாளையும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Advertisement
24 மணி நேரத்தில் 204 மிமீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருக்கும் பகுதிகளுக்குத் தான் ரெட் அலர்ட் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் 3 நாட்களுக்கு திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும், 22ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் 31ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisement