தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு..!

தஞ்சை: தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலைகளில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். சாலையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். தஞ்சை காட்டூரில் 4,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் சாலையோரம் குவித்து வைத்துள்ளனர்.

Advertisement

விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு இதுவரை கொள்முதல் செய்யவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் 8,000 மூட்டைகள் குடோனுக்கு எடுத்துச்செல்லவில்லை. நெல் கொள்முதல் செய்யாததால் சாலையில் 7,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்பிய பிறகே விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய முடியும்.

போர்க்கால அடிப்படையில் அரசு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தினேன். உற்பத்தி அதிகம் என்றால் அதற்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படாததால் நெல்லை சாலைகளில் கொட்டிவைத்து 20 நாளாக காவல் காக்கும் நிலை உள்ளது. நகைகளை அடகுவைத்து விவசாயம் செய்தும், மழையில் நெல்மணிகள் நனைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement