மழையால் ஆட்டம் பாதிப்பு: பாகிஸ்தான் 158/4; அயூப், ஷகீல் அரை சதம்
Advertisement
அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் (6), பாபர் ஆஸம் (0) இருவரும் ஷோரிபுல் இஸ்லாம் வேகத்தில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் 8.2 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சைம் அயூப் - சவுத் ஷகீல் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. அயூப் 56 ரன் (98 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹசன் மகமூத் பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் வசம் பிடிபட்டார். பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. சவுத் ஷகீல் 57 ரன், முகமது ரிஸ்வான் 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Advertisement