தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரவு பெய்த கனமழையால் அதிகாலை ஏலகிரி மலைப்பாதை வளைவுகளில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்: நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்

ஏலகிரி: ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு ெபய்த கனமழையால் நேற்று அதிகாலை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,700 மீட்டர் உயரத்தில் உள்ள ஏலகிரி மலையில் கோடை காலத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஏழைகளின் ஊட்டியாக விளங்கி வருகிறது. இதனால் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் சுற்றிப்பார்த்துவிட்டும் செல்கின்றனர். மலைப்பாதையில் ஏறும்போது அழகிய 14 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன.
Advertisement

இந்நிலையில் ஏலகிரி மலையில் பருவமழை காரணமாக சமீபமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும் ஏலகிரி மலையில் கனமழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ஏலகிரி மலைப்பாதையில் 3, 4, 5வது கொண்டை ஊசி வளைவுகளில் திடீரென ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் 9வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் விழுந்த நிலையில், அதற்கு கீழுள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத பாறைகளை அகற்றினர். அதன் பின்னர் வாகனங்கள் சீராக இயக்கப்பட்டன.

Advertisement

Related News