தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: குமரிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், ஆற்று பாய்ச்சல்கள் அதிகரித்து, பல இடங்களில் தாழ்வான பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு தொடர்பாக 1077, 0462 250 1070, 97865 66111 ஆகிய அவசர எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என நெல்லை ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (நவ.24) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News