தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்ணாமூச்சி காட்டும் மழையால் களக்காடு, திருக்குறுங்குடியில் நீரின்றி வறண்டு வரும் ஆறுகள், குளங்கள்

* பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

Advertisement

களக்காடு : களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. கடந்த வாரம் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. ஆனால் களக்காடு பகுதிகளில் மழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

களக்காடு அருகில் பெய்த மழை களக்காடு ஊருக்குள்ளும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் பெய்யாமல் மறைந்தது, இதனால் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடும் வெயில் காணப்படுகிறது.

மழை தொடர்ந்து பெய்யாமல் இருப்பதால் வனப்பகுதிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதுபோல திருக்குறுங்குடி வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர்வரத்து குறைந்து கொண்டே செல்கிறது. சிறிய ஓடையில் செல்வதை போல் தண்ணீர் ஓடுகிறது.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் சோதனை சாவடி அருகே தடுப்பணையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் ரோட்டில் மோர் மடம் கால்வாயில் தண்ணீர் வற்றியதால் பாறைகளாக காட்சி அளிக்கிறது. திருமலைநம்பி கோயில் படித்துறையையொட்டிய நம்பியாற்றுபகுதியிலும் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.

நம்பியாற்றில் நீர் வரத்து குறைவதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடுவதில் பாதிப்பு ஏற்பட்டது. தென் மேற்கு பருவமழை விடை பெறும் நிலையில் போதிய மழை இன்றி களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் உள்ள குளங்களும், ஆறுகளும் நீரின்றி வறண்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement

Related News