தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளனர்: துணைமுதலமைச்சர்

சென்னை: மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளதாக துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை துணைமுதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisement

இதை தொடர்ந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னை நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், பேசிய அவர், மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தொடங்கி வைத்திருந்தோம். அந்தப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம் என தெரிவித்தார்.

 

Advertisement