தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு!!

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். டிட்வா புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1601 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில் டிட்வா புயல், மழையால் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்பார்ப்புக்கு மாறாக சென்னை அருகிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. நாளை காலை வரை சென்னை அருகேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை வரை இதேபோன்று விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் சராசரியாக 15 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் எண்ணூரில் 26 செ.மீ., பாரிமுனையில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது.

பாரிமுனை 25 செ.மீ., ஐஸ் அவுஸ் 22 செ.மீ., மணலி புதுநகர், பொன்னேரியில் தலா 21 செ.மீ. மழை பெய்துள்ளது.மாமல்லபுரம் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்.

தூத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்கும் என்று தற்போதைக்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்த உடனே நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் தரப்படும். சரியான கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

Advertisement