தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து சிஆர்பிஎப் வீரரை தாக்கிய ‘கன்வர்’ பக்தர்கள்: 7 பேர் அதிரடி கைது

மிர்சாபூர்: மிர்சாபூர் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து சிஆர்பிஎப் வீரரை தாக்கிய ‘கன்வர்’ பக்தர்கள் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் ‘கன்வர்’ யாத்திரை என்பது ஒவ்ெவாரு ஆண்டும் சிவபெருமானின் பக்தர்களால் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரையாகும். இந்த யாத்திரையின்போது, பக்தர்கள் புனித கங்கை நீரைக் குடங்களில் (கன்வர்கள்) ஏந்தியபடி, கால்நடையாகப் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள். இந்த யாத்திரை, இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது.
Advertisement

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்தில், பிரம்மபுத்திரா மெயில் ரயிலைப் பிடிப்பதற்காக வந்திருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை பக்தர்கள் சிலருக்கும் இடையே ரயில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காவி உடை அணிந்திருந்த பக்தர்கள் குழுவாகச் சேர்ந்து, அந்த வீரரைக் கீழே தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், தாக்குதலில் ஈடுபட்ட கன்வர் யாத்திரை பக்தர்கள் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement