தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூடப்படாமல் கிடந்த ரயில்வே கேட் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி மூடுமாறு கூறிய லோகோ பைலட்: ராமநாதபுரம் அருகே பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட்டை கண்ட லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கி மூடச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென், வட மாநிலங்களில் இருந்து ரயில்கள்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் ராமநாதபுரம், வழுதூர் (வாலாந்தரவை), உச்சிப்புளி, பாம்பன் உள்ளிட்ட ரயில் நிலையங்களை கடந்து ராமேஸ்வரம் வந்து செல்கிறது. நேற்று காலை மதுரையிலிருந்து பாசஞ்சர் ரயில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வழுதூர் ரயில்வே கேட் அருகே சென்றது. காலை 6.34 மணிக்கு ரயில்வே கேட் மூடப்படாமல் சிக்னல் கிடைக்காததால், வழுதூர் ரயில்வே கேட் அருகே ரயில் நின்றுள்ளது. உடனே லோகோ பைலட் இறங்கிச் சென்று கேட் கீப்பரிடம் கேட்டை மூடுமாறு கூறினார். அதன்பின் 5 நிமிடம் கழித்து ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என தெரிவித்துள்ளார். லோகோ பைலட் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.