தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்டு சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது

ஜபல்பூர்: மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று மாலை பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை ஜிபே மூலம் செலுத்த முயற்சித்துள்ளார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்தமுடியவில்லை. இதற்கிடையே ரயில் புறப்பட்டது. இதனால், அந்த பயணி சமோசாவை திருப்பி தந்துவிட்டு ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.

Advertisement

ஆனால் அந்த விற்பனையாளர் அவரது சட்டையை பிடித்து இழுத்து, என்னை ஏமாற்ற பார்க்கிறாயா? என் நேரத்தை வீணாக்கிவிட்டாயே? வேறு யாருக்காவது சமோசா விற்று இருப்பேனே? அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இறுதியில் பயணி தனது கையில் கட்டியிருந்த வாட்சை கழற்றி கொடுக்க, அவரது கையில் சமோசாக்களை திணிக்க ஓடும் ரயிலில் ஏற பயணி முயற்சி செய்தார். இதனை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ வைரலான நிலையில் ரயில்வே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அடையாளம் காணப்பட்டு நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் இருந்த வாட்ச் சம்பந்தப்பட்ட பயணிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News