ரயில்வேயில் 1763 அப்ரன்டிஸ்கள்
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: எலக்ட்ரீசியன்/பிட்டர்/பிளம்பர்/பெயின்டர்/வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்)/டீசல் மெக்கானிக்/மிஷினிஸ்ட்/டர்னர்/கார்பென்டர்/கிரேன் ஆபரேட்டர்/டிராப்ட்ஸ்மேன் (சிவில்)/ ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ஷீட் மெட்டல் வொர்க்கர்/மெக்கானிக் மிஷின் டூல்/ பிஎஸ்ஏஏ/சிஓபிஏ/பிளாக் ஸ்மித்/ ஆர்மெச்சூர் விண்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சிஸ்டம் மெயின்டெனன்ஸ்/ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்)/சேனிட்டரி இன்ஸ்பெக்டர்.
வயது: 16.09.2025 அன்று 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். ரயில்வே விதிமுறைப்படி பயிற்சியின் போது உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.rrcpryi.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2025.