தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்ததால் பரபரப்பு; கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதியா?: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தக்க சமயத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மைசூரு- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை கொச்சி பச்சாளம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் நடுவே ஏதோ ஒரு பொருள் கிடைப்பதை என்ஜின் டிரைவர் கவனித்தார்.

Advertisement

அதைத்தொடர்ந்து அவர் ரயிலை நிறுத்தி இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தின் நடுவே ஒரு பெரிய ஆட்டுக்கல் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக எர்ணாகுளம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் ஆட்டுக்கல் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு மைசூரு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இது ரயிலை கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தக்க சமயத்தில் ரயில் இன்ஜின் டிரைவர் ஆட்டுக்கல்லை பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News