தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் நடந்த மோசடிகள் குறித்து செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்த போது, கர்நாடகாவில் சகுண் ராணி என்ற பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இடம் பெற்றிருந்ததாகவும் அவர் 2 முறை வாக்களித்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘எங்களின் விசாரணையில் சகுண் ராணி ஒருமுறை மட்டுமே வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. நீங்கள் (ராகுல் காந்தி) காட்டிய விளக்கக் காட்சியில் சகுண் ராணி 2 முறை வாக்களித்ததாக காட்டப்பட்ட டிக் அடையாளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்படவில்லை.

எனவே சகுண் ராணி அல்லது வேறு யாராவது 2 முறை வாக்களித்துள்ளதாக நீங்கள் எந்த ஆவணத்தை வைத்து முடிவுக்கு வந்தீர்களோ அந்த ஆவணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும்’ என கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும், இல்லாவிட்டால் அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தியை வலியுறுத்தி உள்ளது.

Related News