தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் மீது வழக்கு: காங்கிரஸ் போராட்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் பிரின்டு மகாதேவ். எர்ணாகுளம் பகுதி பாஜ தலைவராக உள்ளார். திருச்சூர் அருகே உள்ள பேராமங்கலம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மலையாள தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பிரின்டு மகாதேவ் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

Advertisement

இது குறித்து திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீகுமார் பேராமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரின்டு மகாதேவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து சட்டசபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று கேரள சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றும், சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சபாநாயகர் ஷம்சீர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். ஆனால் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ தலைவரை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Advertisement

Related News