தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு; முக்கிய சாட்சி ஆஜராகாததால் ஒத்திவைப்பு: 26ம் தேதி மீண்டும் விசாரணை

சுல்தான்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சி ஆஜராகாததால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பா.ஜ.க தேசியத் தலைவரும், தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் அங்குள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இந்த வழக்கில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் நேரில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். பின்னர், கடந்த ஜூலை மாதம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, புகார்தாரர் தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (நவ. 17) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான ராம் சந்திர துபே என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக முடியாததற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, விசாரணைக்கு அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Advertisement

Related News