நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கு
Advertisement
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் தொடங்கிய டெல்லி நோக்கிய 2வது பயணம் அரியானா எல்லைகளில் நிறுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன. விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதா கொண்டு வர வலியுறுத்தவும், அதற்காக ராகுலை சந்திக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement