தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாய சங்கத் தலைவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்தேன். அதற்கான அனுமதியும் முதலில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்களை இங்கு (நாடாளுமன்றத்தில்) அனுமதிக்கவில்லை. அவர்கள் விவசாயிகள் என்பதால், உள்ளே அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்வது? இதுதான் பிரச்னை. தொழில்நுட்ப பிரச்னையும் இருக்கலாம்... பார்ப்போம்’ என்றார்.
Advertisement

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் தொடங்கிய டெல்லி நோக்கிய 2வது பயணம் அரியானா எல்லைகளில் நிறுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன. விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதா கொண்டு வர வலியுறுத்தவும், அதற்காக ராகுலை சந்திக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement