தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் மீதான அவதூறு வழக்கு; விடுமுறையில் சென்றார் நீதிபதி : ஆக.23ம் தேதி விசாரணை

Advertisement

சுல்தான்பூர்: ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் சென்றதால் வழக்கு ஆக.23ம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் 2018ம் ஆண்டு நடந்த போது பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாகக் கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சித் தலைவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி இப்படி பேசிய போது அமித்ஷா பாஜ தலைவராக இருந்தார். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது 2005ம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் அவர் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதைத்தான் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார். இதையடுத்து உபி மாநிலம் சுல்தான்பூர் பா.ஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா 2018 ஆக.4ம் தேதி ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுல்தான்பூர் எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா விசாரித்து வருகிறார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிறப்பு நீதிபதி விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 23ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

Related News