தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய தகவல் ஆணையர் தேர்வு; மோடி, அமித்ஷாவுடன் ராகுல் ஆலோசனை: ஒன்றிய அரசு வழங்கிய பட்டியலை நிராகரித்தார்

புதுடெல்லி: புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது ஒன்றிய அரசு வழங்கிய பட்டியலை நிராகரித்தார். மத்திய தகவல் ஆணையத்தில் தலைவர் பதவியுடன் சேர்த்து மொத்தம் 10 பணியிடங்கள் உள்ளன. தற்போது இரண்டு தகவல் ஆணையர்கள் ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமார் திவாரி மட்டுமே உள்ளனர். செப்.13 அன்று தலைமை தகவல் ஆணையர் ஹீராலால் சமாரியா பதவி விலகி பிறகு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.

Advertisement

உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 8 பதவிகளுக்கும், அடுத்த தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகிய 3 பேர் கொண்ட குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதியம் 1 மணி அளவில் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றார். அவரை தொடர்ந்து ராகுல்காந்தியும் அங்கு சென்றார். சுமார் மதியம் 1.07 மணிக்கு ஆலோசனை தொடங்கியது. ஒன்றரை மணி நேரம், அதாவது சரியாக 88 நிமிடங்கள் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமித்ஷாவும், ராகுல்காந்தியும் பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இந்த ஒன்றரை மணி நேர ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அரசு கொடுத்த அத்தனை பெயர்களையும் ராகுல்காந்தி நிராகரித்தார். மேலும் தனது கருத்து வேறுபாடு குறிப்பையும் பிரதமர் மோடி, அமித்ஷாவிlம் சமர்ப்பித்தார். புதிய தேர்வு குறித்து ஒன்றிய அரசு தயாரித்த பட்டியலில் ஒரு பெயரைக்கூட ராகுல்காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 88 நிமிடம் நடந்த ஆலோசனை நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12(3)-ன் கீழ், பிரதமர் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளார், இதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகியோர் தேர்வு குழுவில் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆலோசனை நடத்தி தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் நியமனத்திற்கான பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கின்றனர்.

Advertisement