தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராதாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

கூடங்குளம் : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியை வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிலம்பம், ஜூடோ ஆகிய தற்காப்புக் கலைகள் பயிற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலம்பம் பயிற்சியை பயிற்சியாளர் விவேகானந்தனும், ஜூடோ பயிற்சியை பயிற்சியாளர் கார்த்திகேயனும் வழங்குகின்றனர்.

3 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் லில்லி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராமன், ஸ்டெல்லா ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர். மாணவிகளின் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்று உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related News