தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அலங்காநல்லூர் அருகே முயல் வேட்டை: 5 பேர் கைது: நாட்டுத்துப்பாக்கி, வேன் பறிமுதல்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேடு வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், மதுரை வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் பூபதிராஜன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், சேதுராஜ், துரைராஜ் ஆகியோர் நேற்று காலை பாலமேடு-வெள்ளையம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பொம்மிநாயக்கன்பட்டி அருகே 5 பேர் நாய்களுடன் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.

Advertisement

அதில் நாட்டுத்துப்பாக்கி, வேட்டையாடிய 2 முயல்கள், பேட்டரி லைட்டுகள் ஆகியவை இருந்தன. தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சித்திரக்கண்ணன் (28), ராஜ்குமார் (23), விஜயகுமார் (24), மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (23) பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (26) என்பதும், பாலமேடு பகுதியில் வேட்டை நாய்களுடன் முயல்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிமிடருந்து துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட முயல்கள், வேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் அழகர்கோவில் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement