ஆர்.கே.பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Advertisement
அதிர்ச்சியடைந்த அப்துல்ரகுமான், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பைக் திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம், நந்திவேடு தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சரத்குமார் (22), சோளிங்கர் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் வேணுகோபால் (22), சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராஜா (28) ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement