தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல கேள்விகளை ஒன்றிய அரசு கேட்டுள்ளதே தவிர மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான கள நிலவரத்தை ஆய்வு செய்யும் கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பூத் முகவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அண்ணாமலை அளித்த பேட்டி:

Advertisement

முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திறப்பதாக சொன்னால், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் பாஜ சார்பில் நாங்கள் பேசுகிறோம். அடுத்த ஆண்டே நிதி கிடைத்துவிடும். தமிழ் பல்கலைக்கழகத்தை திறக்காமல் எப்படி ஒன்றிய அரசு நிதி கொடுக்கும்? எந்த விவசாயிகளின் நெல்லும் மழையில் நனைய கூடாது என்று, நெல் கொள்முதல் நிலையங்களை கட்ட சொல்லி, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு, தமிழக அரசுக்கு பணம் கொடுக்கிறது.

மெட்ரோ ரயில் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 2010ம் ஆண்டு மெட்ரோ கொள்கை படிதான் எல்லா மாநிலத்துக்கும் கொடுக்கப்படுகிறது. மாநில அரசு மெட்ரோ கேட்டு விண்ணப்பிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், 2022ல் கேட்ட மெட்ரோ திட்டத்துக்கு, 2011 மக்கள் தொகையை கொடுத்திருக்கிறார்கள்.

வேண்டுமென்றே தவறான தரவுகளை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. மேலும், நிலம் கையகப்படுத்து போன்ற எந்த விவரங்களும் இடம் பெறவில்லை. எனவே, பல கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளதே தவிர, மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News