கேள்வி நேரத்தை தவற விட்ட அகாலி தள எம்பி: எம்பிக்கள் கவனமுடன் இருக்க சபாநாயகர் அறிவுரை
Advertisement
ஆனால் அவர் அருகில் இருந்த சக எம்பியுடன் பேசிக்கொண்டு இருந்ததால் தனது பெயர் அழைக்கப்பட்டதை கவனிக்க தவறிவிட்டார். இதனையடுத்து சபாநாயகர் அடுத்த கேள்விக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் அகாலி தள எம்பி சபாநாயகரிடம் துணை கேள்வி எழுப்ப தன்னை அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில்,\\” மூன்று முறை உங்களது பெயரை அழைத்தேன். ஆனால் நீங்கள் பேசுவதில் மும்முரமாக இருந்தீர்கள். உங்களது கேள்வி பட்டியலிடப்படும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் அவை நடவடிக்கையின்போது கவனம் செலுத்தாவிட்டால் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது” என்றார்.
Advertisement