தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழித்துறை அருகே பரபரப்பு ஓடையில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி

*தீயணைப்பு துறையினர் மீட்டனர்
Advertisement

மார்த்தாண்டம் : குழித்துறையில் மழைநீர் ஓடையில் தவறி விழுந்து கால் உடைந்த நிலையில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளியை, மறுநாள் காலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). கூலித்தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. இந்த நிலையில் அர்ஜுனன் நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் வேலை முடிந்த பின்னர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார்.

இதற்காக பாலத்தின் கீழ் பகுதிக்கு சாஸ்தான்கோவில் வழியாக இறங்கி உள்ளார். அப்போது நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள மழைநீர் சேகரிப்பு ஓடையில் விழுந்துள்ளார். இதில் அர்ஜுனனின் கால் உடைந்தது. இதனால் அவரால் ஓடையில் இருந்து எழ முடியவில்லை.உயிர்பயத்தில் அர்ஜுனன் கத்தி கூச்சலிட்டார். ஆனால் அந்த வழியாக மக்கள் நடமாட்டமே இல்லை. பலமுறை கூச்சலிட்டும் யாரும் வராததால் சோர்வடைந்த அர்ஜுனன் வேறு வழியில்லாமல் ஓடைக்குள்ளேயே கிடந்துள்ளார்.

அங்கு தண்ணீர் இல்லாததால் உயிர் தப்பினார். ஆனாலும் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நிலையில் அர்ஜுனன் தவித்தார். இதையடுத்து நேற்று காலையில் மீண்டும் அர்ஜுனன் உதவிகேட்டு கூச்சலிட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த சிலருக்கு அர்ஜுனனின் கூக்குரல் கேட்டது.

அவர்கள் உடனே அங்கு சென்று அர்ஜுனனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மழைநீரோடையில் சிக்கியிருந்த அர்ஜுனனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement