தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருசநாடு அருகே கிராமச்சாலை பணிக்கு பொருட்கள் தர ஆய்வு

Advertisement

வருசநாடு: வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு தார்ச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ள ஜல்லிகற்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் தர ஆய்வு செய்தனர். வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு செல்லும் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுடைய சாலையின் இரண்டு புறமும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, கொட்டை முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும் பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடரப்படவுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது கட்டுமானப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதித்து பயன்படுத்த அனுமதித்து வருகின்றனர்.

அதன்படி பொன்னன்படுகை கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கடமலை-மயிலை யூனியன் பொறியாளர் துறை சார்பில் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் தர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement