தமிழக அரசு பள்ளிகளின் தரம் வெளிநாடுகளுக்கு இணையாக உள்ளது: நடிகர் கார்த்தி பெருமிதம்
இந்நிகழ்வில், நடிகர் கார்த்தி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் உயர்தரமான கல்வி வழங்கப்படுகிறது. சமீப காலங்களில் வெளியான கருத்துக் கணிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குகிறார்கள்’’ என்றார். தொடர்ந்து தனது தந்தையின் சகோதரி இளமை காலத்தில் பள்ளிக்குச் செல்லவும், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட சூழலை கண்ணீர் மல்க தெரிவித்து, பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.
தொடர்ந்து நடிகர் சிவக்குமார் பேசுகையில், ‘‘சிறு வயதில் ஆசிரியர்களைப் பார்த்து அவர்களை போல ஆக வேண்டும் என்று படித்தேன். ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று ஓவியம் பயின்றேன். கலைஞர் கருணாநிதி வசனங்களைக் கேட்டு திரையுலகில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அவர் வசனத்தையே பேசி நடித்தேன்’’ என்றார்.