தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதி குடும்பத்தினரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சிறையில் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

அதில், சிறையில் தன்னை சந்திக்க, அத்தையுடன் வந்த மகன் மற்றும் மகளை சிறைக்குள் விடாமல் வெளியே அனுப்பி விட்டனர். இலங்கையில் உள்ள தனது தாயுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினரை சந்திக்க சிறப்பு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, தமிழ்நாடு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தினரை சந்திப்பதற்கும், தொலைபேசி மூலம் பேசுவதற்கும் விதிகளை வகுத்து கடந்த ஏப்ரல் மாதம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மனுதாரருக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி மனுதாரரை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

Advertisement

Related News