தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்: ஏலம் விட வலியுறுத்தல்

Advertisement

புழல்: புழல் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் தற்போது பழுதாகி உருக்குலைந்து வீணாகி வருகின்றன. மேலும், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றன. இவற்றை ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புழல் பகுதிகளில் குற்றப்பிரிவு மற்றும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் சார்பில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட காலமாக புழல் காவல்நிலையம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது மழை மற்றும் வெயிலால் துருப்பிடித்து வீணாகி, உருக்குலைந்த நிலையில் உள்ளன.

மேலும், பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் புதர்காடுகள் வளர்ந்து, அங்கு பல்வேறு சுற்றுப்புற சுகாதார சீ ர்கேடுகள் நிலவி வருகின்றன. இதுகுறித்து காவல்நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தால், இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அகற்றப்படவில்லை என்கின்றனர். எனவே, இந்த பறிமுதல் வாகனங்கள் தொடர்பான வழக்குகளில் உடனடி தீர்வு காணவும், அங்கு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 100க்கும் மேற்பட்ட பறிமுதல் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விடுவதற்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News