தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது..!!

சென்னை: சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி என்பவரை துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சோழவரம் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார் ரவுடி சேதுபதி. இவர் மீது 5 கொலை வழக்குகளும், கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் இவர் தலைமறைவாகியிருந்தார். அதன் பின்னர் இவரை தனிப்படை காவல்துறையினர் தேடிவந்தனர்.இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவி ஏற்ற பின்பு ரவுடிகளை ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Advertisement

அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட ரவுடிகளை ஒடுக்கக்கூடிய தனிப்படை காவல்துறையினர் சூரப்பட்டு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இவர் மீது மாதவரம், மீஞ்சூர், காட்டூர், புழல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, தொழிலதிபர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனுக்கு எதிர் தரப்பினராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Advertisement