சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது..!!
Advertisement
அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட ரவுடிகளை ஒடுக்கக்கூடிய தனிப்படை காவல்துறையினர் சூரப்பட்டு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இவர் மீது மாதவரம், மீஞ்சூர், காட்டூர், புழல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, தொழிலதிபர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனுக்கு எதிர் தரப்பினராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisement