தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புஸ்ஸி ஆனந்தை தூக்கிலவா போட போறாங்க... விமானத்தில் ஏறி போன விஜய் இன்று வரை வெளியே வரல... 41 பேர் பலி குறித்து பிரேமலதா விமர்சனம்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் என்ற ரத யாத்திரை, பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது: கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சியில் 41 பேர் உயிர்களை இழந்துள்ளனர். அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

Advertisement

நான் நேரடியாக சென்று பார்த்தேன். அப்பாவி மக்களை சந்திக்க, தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய். சூட்டிங்கிற்கு சரியாக செல்ல கூடிய விஜய், கரூருக்கு தாமதமாக வந்தார். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா?. வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது. விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள்.

அண்ணன் என்ன செய்தார் என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். கரூர் சம்பவம் நடந்ததும் விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர், இன்று வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும். தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜயும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். தூக்கிலவா போட போகிறார்கள்?. நேரில் வந்து சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News