தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாக்கரில் இருந்த ரூ.7 லட்சம் கொள்ளை; நடிகையை தள்ளிவிட்டு தப்பிய சமையல்காரர்: போலீஸ் கைவிரித்ததால் அதிர்ச்சி

Advertisement

மும்பை: லாக்கரில் வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சமையல்காரர், நடிகையை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல டிவி நடிகை காஷிஷ் கபூர் என்பவர் தனது தாயின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக வீட்டில் உள்ள லாக்கரில் 7 லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்தார். அவர் சிங்கப்பூர் செல்லவிருந்ததால், அதற்கு முன் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், வீட்டில் இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். தனது வீட்டில் பணம் திருடு போனது குறித்து ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

பணம் காணாமல் போனதை தொடர்ந்து, தனது சமையல்காரர் வீட்டை விட்டு சற்று நேரத்திற்கு முன்புதான் வெளியேறியது காஷிஷுக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, அவரது பாக்கெட்டுகளை சோதனை செய்யும்படி கூறியுள்ளார். அவர் பலமுறை மறுத்ததால், காஷிஷ் சத்தமிட்டு சோதனை செய்தபோது, அவரது பாக்கெட்டில் 50,000 ரூபாய் பணக்கட்டு இருந்ததை கண்டுபிடித்தார். காஷிஷ் தனது செல்போனை எடுத்து எதையாவது செய்வதற்குள், அந்த சமையல்காரர் காஷிஷின் கைகளைப் பிடித்து சுவரில் சாய்த்து, யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த நபரை பிடிப்பதற்குள் அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட காஷிஷ், சமையல்காரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் திருடுபோன பணம் திரும்ப கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று போலீசார் கூறியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News