தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூல உள்அறை 2வது முறையாக திறப்பு: தங்க ஆபரணங்கள் வேறு அறைக்கு மாற்றம்

பூரி: ஒடிசா பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூலத்தின் உள் அறையானது இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அங்கிருந்த மதிப்புமிக்க ஆபரணங்கள் தற்காலிக கருவூலத்துக்கு மாற்றப்பட்டது. ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் உள்அறையை திறந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருள்களை மதிப்பிட, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒடிசாஉயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வந்த் ராத் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
Advertisement

கோயிலின் ரத்ன பந்தர் எனப்படும் கருவூலத்தின் வெளி மற்றும் உள்அறையானது 46 ஆண்டுகளுக்கு பின் கடந்த14ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தற்காலிக கருவூல அறைக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கருவூலத்தின் உள்அறையை மீண்டும் திறந்து அங்கிருக்கும் பொருட்களை மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை 9.51மணிக்கு கருவூலத்தின் உள்அறை திறக்கப்பட்டது.

ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர், ஒடிசா அரசினால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த அனைத்து விலை உயர்ந்த பொருட்களும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருவூலத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது.

அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கருவூவலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் தெரிவித்தார். ஒரே நாளில் ஆபரணங்களை மாற்றும் பணி முடிவடையாதபட்சத்தில் நிலையான பணி தொடரும். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார். கருவூல உள்துறை திறக்கப்படுவதால் நேற்று காலை 8 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

Related News