தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோவில்கள் சுற்றுலா 17ம் தேதி முதல் தொடங்குகிறது: அமைச்சர் இரா. இராஜேந்திரன் தகவல்

சென்னை: புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோவில்கள் சுற்றுலா 17ம் தேதி முதல் தொடங்குகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நல்வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலா நடத்தப்பட்டது. இந்த சுற்றுலாவானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோவில்கள் தொகுப்பு சுற்றுலா 17.09.2025 அன்று முதல் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒருநாள் வைணவ கோவில் சுற்றுலா சென்னை-1 (ஒரே நாளில் 6 பெருமாள் திருக்கோவில்கள்)

சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி –அஷ்டலக்ஷ்மி கோவில் கோவில், பெசண்ட் நகர் – நித்தியகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை – ஸ்தல சயன பெருமாள் கோவில், மாமல்லபுரம் – பாடலாத்ரி நரசிம்மர் கோவில், சிங்கபெருமாள் கோவில் – நீர்வண்ணப் பெருமாள் கோவில், திருநீர்மலை ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் வைணவ கோவில் சுற்றுலா சென்னை-2 (ஒரே நாளில் 7 பெருமாள் திருக்கோவில்கள்)

சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி – நீர்வண்ணப் பெருமாள் கோவில், திருநீர்மலை – பொன்னுசாமி பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் – வைத்திய வீர ராகவ பெருமாள் கோவில், திருவள்ளூர் – ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஶ்ரீபெரும்புதூர் – வரதராஜப் பெருமாள் கோவில், பூந்தமல்லி ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் வைணவ கோவில் சுற்றுலா - மதுரை

மதுரை, ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து புறப்பட்டு, கள்ளழகர் கோவில், அழகர் கோவில்- ஶ்ரீ யோக நரசிம்மர் பெருமாள் கோவில், ஒத்தகடை – காளமேகப் பெருமாள் கோவில், திருமோகூர் – சௌம்ய நாராயண பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் – வீர ராகவ பெருமாள், வண்டியூர்- கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் வைணவ கோவில் சுற்றுலா – திருச்சி

ஓட்டல் தமிழ்நாடு, திருச்சியிலிருந்து புறப்பட்டு, அழகிய மணவாளன் பெருமாள் கோவில், உறையூர் – அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவில், ஶ்ரீரங்கம் – புருஷோத்தம பெருமாள் கோவில், உத்தமர் கோவில் – பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், குணசீலம் – பெருமாள் கோவில், தான்தோன்றிமலை ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1100/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் வைணவ கோவில் சுற்றுலா – தஞ்சாவூர்

ஓட்டல் தமிழ்நாடு, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு, சாபவிமோசன பெருமாள் கோவில், திருகண்டியூர் – சாரங்கபாணி பெருமாள் கோவில், கும்பகோணம் – உப்பிலியப்பன் பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம் – சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் – சாரநாத பெருமாள் கோவில், திருச்சேறை – இராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி – கோதண்டராமர் கோவில், வடுவூர் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்

Advertisement

Related News