தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா துவக்கம்: 12ம் தேதி தேரோட்டம்

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் புரட்டாசி திருவிழா 10 நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு விழாவை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாம கொடியை அய்யாவின் பக்தர்கள் கையில் ஏந்தியபடி பள்ளியறையை 5 முறையும், கொடிமரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி வலம் வந்தனர். பின்னர் பதிவலம் வந்து, காலை 6.30 மணியளவில் புரட்டாசி திருவிழாவுக்கான திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இன்றிரவு 8 மணியளவில் காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் நாள்தோறும் மாலை திருஏடு வாசிப்பு நடக்கிறது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8ம் நாளான வரும் 11ம் தேதி இரவு 8 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

Advertisement

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 12ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணியளவில் திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார். தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், சிவராஜ், வைகுண்டராஜன், ஜெயகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Advertisement

Related News