தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரட்டாசி மாதம், மகாளய அமாவாசை எதிரொலி மீன்கள் விலை வீழ்ச்சி; வெறிச்சோடிய மார்க்கெட்

கோவை : புரட்டாசி மாதம் மற்றும் மகாளய அமாவாசை என்பதால், கோவை மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், பொதுமக்கள் கூட்டமின்றி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. புரட்டாசி மாதம் கடந்த வாரம் தொடங்கியது.

Advertisement

பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பலர் இம்மாதத்தில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இதனால், அவர்கள் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகாளய அமாசாசையும் வந்தது. இதனால் கோவையில் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது.

உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில கடலோர மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர ஆழியாறு, திருமூர்த்தி அணை மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

புரட்டாசி மாதம் துவங்கியதால் மீன் மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட மீன் வரத்து குறைந்தது.மீன் வாங்குவதற்கும் குறைவான மக்களே வருகை புரிந்தனர். அவர்கள் மீன் விலை குறைவாக இருந்ததால், அதிகமான மீன்களை வாங்கி சென்றனர்.

மேலும், மார்க்கெட்டில் மத்தி,அயில மீன் இரண்டு கிலோ ரூ.150-க்கும்,வாவல் ஒரு கிலோ ரூ.130,கூலி மீன் ரூ.100, வஞ்சிரம் சிறியது ரூ.300,நண்டு ரூ.350, கிழங்கா மீன் ரூ.100, செம்மீன் ரூ.300-க்கு விற்பனையானது. பல்வேறு மீன்கள் ஒரு கிலோ ரூ.200-க்கு கீழ் விற்பனையானது. புரட்டாசி மாதம் ஆரம்பித்ததால் அடுத்த ஒரு மாதம் மீன் வியாபாரம் மந்தமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், கோழி, மட்டன் இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News