தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாப் அரசு அதிரடி அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு: அக்.2 முதல் தொடக்கம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. நேற்று முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் சுகாதார காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement

இதுதொடர்பாக முதல்வர் பகவந்த்மான் கூறுகையில்,’ ரூ.10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்கான சுகாதார அட்டைகள் சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்களில் வழங்கப்படும். குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து சுகாதார அட்டையைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்காக இதுவரை 550க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கப்படும். முன்பு, ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும். தற்போது அந்த வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.778 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisement