தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மர்ம நபர்கள் தாக்குதல்; பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் முன்னாள் கூட்டாளி சுட்டு கொலை

 

Advertisement

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரை சேர்ந்தவர் இந்தர்பிரித்சிங் என்ற பரி(35). இவர் பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். பஞ்சாப், சண்டிகரில் ,கொலை, கொலைமுயற்சி, மிரட்டி பணம் பறிப்பு, கலவரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இந்தர்பிரித் சிங் நேற்று முன்தினம் இரவு சண்டிகரில் உள்ள கிளப் ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கிருந்து காரில் திரும்பிய போது இன்னொரு நபரும் காரில் இருந்துள்ளார்.

கார் கிளம்பி சிறிது தூரம் நகர்ந்த போது அடையாளம் தெரியாத நபர் இந்தர்பிரித்சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த இந்தர் பிரித்தை சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். போலீசார் கூறுகையில், ரவுடி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Advertisement