தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ள நிவாரண சிறப்பு நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப் பேரவை தீர்மானம்

சண்டிகர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்பு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி ரூ.1,600 கோடி வெள்ள நிவாரணமாக அறிவித்தார்.

Advertisement

ஆனால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.20 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண சிறப்பு நிதி தொகுப்பாக வழங்க வேண்டுமென பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் எந்த பதிலும் தரப்படவில்லை. அதே சமயம் பஞ்சாப் ஆளுநரை மட்டும் பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல இழப்பீடு நிதி அறிவிக்கப்பட்டது. கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று வெள்ள நிவாரணத்திற்கு சிறப்பு நிவாரண நிதி தராமலும், கோரிக்கைக்கு பிரதமர் மோடி பதில் கூட தராமல் மாநில மக்களை அவமதித்ததற்காகவும் ஒன்றிய அரசை கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement