தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாப் உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு திருமணமான பெண்ணுடனான உறவு பலாத்காரம் ஆகாது: கள்ளக்காதலனுக்கு விதிக்கப்பட்ட 9 ஆண்டு சிறைதண்டனையும் ரத்து

சண்டிகர்: பஞ்சாப்பைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் கடந்த 2012-13 காலகட்டத்தில் பாலியல் உறவில் இருந்துள்ளார். அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து 50க்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர், அந்தப் பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு அந்த இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த இளைஞர் தரப்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், ‘புகார் அளித்த பெண், இரண்டு குழந்தைகளின் தாய். குற்றம்சாட்டப்பட்டவரை விட 10 வயது மூத்தவர். அவர் ஒன்றும் அறியாத அப்பாவி பெண் அல்ல. திருமண பந்தத்தில் இருக்கும்போதே, திருமண வாக்குறுதியை நம்பி பாலியல் உறவுக்கு சம்மதிப்பது, ஒழுக்கக்கேடான மற்றும் திருமண பந்தத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதை சட்டப்படி பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. இருவரின் சம்மதத்துடன் நடந்த பாலியல் உறவானது ஒரு கட்டத்தில் கசப்பான முடிவை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பாலியல் பலாத்காரம் போன்ற கடுமையான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கக் கூடாது’ என்று குறிப்பிட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.

Advertisement

Related News