தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாப்- அரியானா எல்லையில் 100வது நாள் போராட்டம்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்

அம்பாலா: விவசாயிகள் போராட்டத்தின் 100வது நாளான நேற்று பஞ்சாப்- அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம். எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்றனர். டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளை பஞ்சாப் -அரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Advertisement

இதை தொடர்ந்து, ஷம்பு, கனோரி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 100வது நாளான நேற்று ஷம்பு, கனோரியில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். ஷம்பு, கனோரி மற்றும் டப்வாலி போன்ற எல்லை பகுதிகளில் விவசாய தொழிலாளர் போராட்ட குழு தலைவர் சர்வண்சிங் பந்தர் நேற்று சென்றார். அங்கு விவசாயிகளை சந்தித்து அவர் பேசுகையில்,‘‘ டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு ஒன்றிய பாஜ அரசு அனுமதி மறுக்கிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க பஞ்சாப்- அரியானா எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அனுமதி மறுத்தால், தர்ணா நடத்தப்படும்’’ என்றார்.பஞ்சாப்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு கூட போக முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News