தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புனே புத்தக திருவிழாவில் அதிக போஸ்டர்களை ஒட்டி இந்தியா கின்னஸ் சாதனை: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது

புனே: தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் புனே பெர்குசன் கல்லூரியில் ‘புனே புத்தக திருவிழா’ நடைபெற்று வருகிறது. இதில் பழங்குடியின எழுத்துக்களை காட்சிப்படுத்தும் விதமாக 1,678 போஸ்டர்கள் காட்சிபடுத்தப்பட்டன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிபடுத்துதல் பிரிவின் கீழ் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

Advertisement

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 1,365 போஸ்டர்களை காட்சிப்படுத்தி அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் டங்ரிகர், அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிப்படுத்தியதற்கான சாதனையை இந்தியா இப்போது அமெரிக்காவை முந்திப் பிடித்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் இதற்கான சான்றிதழில் அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிப்படுத்தியதற்கான உலக சாதனை, புனே புத்தகத் திருவிழா, யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ரைஸ் அறக்கட்டளை ஆகியவற்றால் டிசம்பர் 12 அன்று புனேயில் எட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாதனை, பழங்குடியின தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவிற்கு ஒரு அஞ்சலியாகும். அவரது வாழ்க்கையும் பணிகளும் புத்தக திருவிழாவில் ஒரு சிறப்பு அரங்கம் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News