புல்லரம்பாக்கம் ஊராட்சி பள்ளியை தரம் உயர்த்த மக்கள் வலியுறுத்தல்
Advertisement
கடந்த 2016ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி அனைத்து தடை இல்லா சான்றுகளும் பெற்று வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் வங்கியில் செலுத்தியுள்ளனர். ஆனால் இதனால் வரை பள்ளியில் தரம் உயர்த்தப்படவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தருமாறு கிராம மக்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘’கல்வி வளர்ச்சிக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் புல்லரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement