தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்

பொன்னேரி: கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது பழவேற்காடு, காட்டுப்பள்ளி இடையே கருங்காலி பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சாலையில் கடல்நீர் பாய்ந்தது. இதன்காரணமாக சாலை முழுவதுமாக மணல் தூர்ந்து திட்டுகளாக மாறியதால் பழவேற்காட்டில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம், அதானி, எல் அண்ட் டி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களுக்கு செல்லும் பணியாளர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன்பின்னர் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
Advertisement

இந்த நிலையில், தற்போது திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அந்த சாலை மீது கடல் நீர்வெளியேறி வருவதால் சாலை முழுவதும் கடல் நீர் மற்றும் மணல் திட்டகளாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களை ஓட்டமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடல் கொந்தளிப்பு அதிகமாகும்போது சாலை முற்றிலுமாக துண்டிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலைக்கு குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இருப்பினும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் வியாபாரம், வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மீஞ்சூர் வழியாக 40 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை உடனடியாக சீரமைத்து பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News