தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளியேற்றப்பட்டவர்கள் கூடி எடப்பாடியை நீக்குவோம்: செங்கோட்டையனை சந்தித்த பின் புகழேந்தி ஆவேசம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நேற்று அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா, எம்ஜிஆரை விட பெரிய தலைவர் என்று எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையன் சிரித்த முகத்துடன் இருக்கின்றார். தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் மனிதராக பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா, செல்லப்பிள்ளையாக செங்கோட்டையனை வைத்திருந்தார். அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார். ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அவரையே தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் வரும் போது நாய் குட்டி போல் அவர் பின்னால் ஓடி வந்தவர் தான் எடப்பாடி. பணம் வந்த பிறகு திமிர் வந்துவிட்டது.

Advertisement

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக வந்து கட்சியை நாசப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை, தொண்டர்கள் ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் பணமும், பிரியாணியும் கொடுக்கிறார். அதனால், கூட்டம் கூடுகிறது. கட்சியின் முதலாளி எடப்பாடி பழனிசாமி அல்ல. அவர் ஒரு கைக்கூலி, அவர் கட்சியை விட்டு யாரையும் நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து செங்கோட்டையனை செயல்படுவதற்காக அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் 10-15 பேர் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் சந்தித்து பேச வேண்டும் என்பது என் ஆசை. நூறு சதவீதம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதை செங்கோட்டையனிடம் பேசி உள்ளேன். தங்கமணியும் வேலுமணியும் இணைந்து இயக்கும் ரோபோ தான் எடப்பாடி பழனிசாமி. வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள் கூடுவோம், எடப்பாடி பழனிசாமியை நீக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement